நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடையை மாற்ற முடியவில்லை என்றால் நெடுஞ்சாலையை மாற்றுங்கள் - நூதன முறையில் மனு அளித்த சமூக ஆர்வலர்..!

பல்லடம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைக்கு எதிராக போராடி ஓய்ந்து போன சமூக ஆர்வலர், நெடுஞ்சாலையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி வட்டாட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி, கோழிப்பண்ணை, பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் செல்லும் பிரதான சாலையாக பல்லடம் பகுதி உள்ளது.

இந்நிலையில், பல்லடம் நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் எதிர்புறமாக ஒரு டாஸ்மாக் கடை, செட்டிபாளையம் பிரிவில் ஒரு டாஸ்மாக் கடை, காளிவேலம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தனியார் பார் என பல்லடம் நெடுஞ்சாலையில் வழிநெடுக செயல்படும் மதுபான கடைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகள் மது அருந்துவதால், விபத்து ஏற்படும் அபாயம் மற்றும் பெண்கள் உள்ள பயணிகள் பாதிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார் மனு அளிக்கப்பட்டு வந்தது.



அவ்வாறு அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய சமூக ஆர்வலர் அண்ணாதுரை, மனம் தளராமல் நூதன மனு ஒன்றை பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில், துணை தாசில்தாரிடம் அளித்துள்ளார்.



அம்மனுவில், நெடுஞ்சாலையில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தற்போது புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



நெடுஞ்சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மதுவை ஒழிக்க போராடி ஓய்ந்த சமூக ஆர்வலர்கள் நூதன முறையில் சாலையை மாற்றக்கோரி மனு கொடுத்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...