முதுமலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

6 நாட்கள் நடைபெறவுள்ள இந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் குழுவுக்கு 3 பேர் என 50 குழுக்களில் மொத்தம் 150 பேர் ஈடுபட்டுள்ளதாக வனத்துறை தகவல்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்மண்டல பகுதி 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்த வனப்பகுதியில் யானைகள், புலிகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள் மற்றும் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் இங்கு ஆண்டுதோறும் வனவிலங்குகள் எண்ணிக்கை மற்றும்அவற்றின் வாழ்வாதாரம் குறித்து பருவமழைக்கு முன்பு மற்றும் பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுக்கும் பணி இன்று காலை துவங்கியது. சுமார் 150 பேர் இந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் சுமார் மூன்று பேர் அடங்கிய நபர்கள் என்ற வீதத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.



மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குழுக்கள் ஒவ்வொன்றும் வனப்பகுதியை நேர்க்கோட்டு பாதையாக பிரித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று முதல் இரண்டு நாட்கள் வரை வனவிலங்குகளின் எச்சம், கால் தடம் போன்றவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நீரோடை மற்றும் வனவிலங்குகளை நேரடியாக கண்டும் அதற்கான எண்ணிக்கையும் வைத்து கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெறும்.



ஆறு நாட்கள் நடைபெறும் இந்த பணியில் இதற்காக பிரத்யேமாக தயாரிக்கப்பட்டசெல்போன் செயலி , மற்றும் தெர்மாமீட்டர், ஜிபிஎஸ் கருவிகள் மூலம் துல்லியமாக இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

ஆறு நாட்கள் முடிந்த பிறகு பருவமழைக்கு முன்பு வனவிலங்கு எண்ணிக்கை மற்றும் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து துல்லியமாக கண்டறிய முடியும்.

இவ்வாறு வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...