முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் - வாகன ஒட்டிகளுக்கு காப்பக நிர்வாகம் அறிவுறுத்தல்

தொடர்மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு விலங்குகள் இடம்பெயர தொடங்கியுள்ளதால் வாகன ஒட்டிகள் கவனமாக பயணிக்கவும், விலங்குகளின் அருகே சென்று புகைப்படம் எடுக்க கூடாது எனவும் அறிவுறுத்தல்.



நீலகிரி: தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கத் தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாககாட்டு யானைகள், காட்டு எருமைகள், கரடிகள், மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வர தொடங்கியுள்ளன.

அவ்வாறு வரும் வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை ஓரங்களுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் மசினகுடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொரப்பள்ளியில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லக்கூடிய கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை அருகே காட்டு எருமைகள் மேய்ச்சலுக்காக கூட்டம் கூட்டமாக வருகின்றன. மேலும் அப்பகுதியில் கரடிகள் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், அவ்வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனபுலிகள் காப்பக நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளின் அருகில் சென்று வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...