திருப்பூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுடன் நடை பயணமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். .



திருப்பூர்: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஏற்கெனவே சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் என அனைவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பழைய ஊதியம் என்றால் என்ன..?

பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு ஊழியர் கடைசியாக பெற்ற ஊதியத்தின் அடிப்படையில், மாதந்தோறும் பெற்றுக் கொள்ளும் ஓய்வூதியம் ஆகும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது 60 சதவீத பணி முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும். எஞ்சியுள்ள 40 சதவீத தொகையை ஆனுய்டி திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன் கீழ் கிடைக்கும் பலன்கள் கூடுதலாக இருக்கும் என்றாலும் அதற்கு உத்தரவாதம் கிடையாது.



100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் போராட்டம்:-

இத்திட்டத்தில் இதுவரை சுமார் ஆறு லட்சம் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாதாந்திர ஊதியம் உள்ளிட்ட ஓய்வூதிய காலப் பலன்கள் இத்திட்டத்தில் இல்லாததால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்ததனர்.

இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆனால் தற்பொழுது வரை அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது எனவே தேர்தல் வாக்குறுதி படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் ஆறு லட்சம் குடும்பங்களில் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் வீரபாண்டி பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடை பயணமாக சென்றனர்.



பின்னராக ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...