கோவை குனியமுத்தூரில் மழையோடு சேர்ந்து குடியிருப்புக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

குனியமுத்தூர் வசந்தம் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்கிய நிலையில் அப்பகுதிக்குள் காட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்தது. அதை பிடிக்க பாம்பு பிடி வீரர்களுக்கு அறிவித்த நிலையில் தாமதமானதால் அப்பகுதி பெண்களே பிடித்து வனத்துக்குள் விட்டனர்.



கோவை: தமிழகம் முழுக்க மழை பெய்ந்து வரும் நிலையில் மழைநீர் தேங்கி பல்வேறு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. இதில் கோவை பகுதிகளில் மண்சரிவு ,மரம் சாய்தல் என பல்வேறு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.

இச்சூழலில் மழை காலம் முழுக்க தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மேலும் பெரும் இன்னல்கள் ஏற்பட்டு விடுகின்றன.

அடை மழை நீர் தேங்கி புகுந்த வெள்ளத்தை வெளியேற்ற சிரமப்படும் குடியிருப்பு வாசிகள் தற்பொழுது மேலும் சில ஆபத்தை பார்த்து அஞ்சுகின்றனர்.

மழை வெள்ளத்தில் சூழும் குடியிருப்புகளுக்குள் தேவையற்ற கசடுகள் வந்து செல்லும் நிலையில் பூச்சிகள் பாம்புகளும் புகுந்துவிடுகின்றன.

இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அப்பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது.

அதில் சுமார் 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்தது. தண்ணீர் பாயும் பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தது இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர் ஆனால் அங்கு பாம்பு பிடி வீரர் வராததால் அப்பகுதியில் உள்ள பெண்கள் பயமின்றி அந்த பாம்பை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து அருகில் உள்ள வனப் பகுதியில் விட்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...