கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாசகர் மன்ற துவக்க விழா - மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து அறிவுரை

வாசகர் மன்ற துவக்க விழாவில் பேசிய எஸ்.என்.எம்.வி கல்லூரி இயற்பியல் துறைத்தலைவர் லெனின் பாரதி, மாணவர்களுக்கு கற்பனைத்திறன், சீரிய சிந்தனைகள், பகுத்தறியும் தன்மை வளரவும் புத்தக வாசிப்பு அவசியம் என்றார்.



கோவை: கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வாசகர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆங்கிலத்துறை விரிவுரையாளர் பிரேமா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி வாசகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் வாசகர் மன்றம் குறித்து அறிமுகவுரை ஆற்றினார்.



துணை முதல்வர் முனைவர். வரதகுரு, துறைத் தலைவர்கள் சரவணன், சண்முக சிவகாமவள்ளி, G.T. சுதா ஆகியோர் இந்த நிகழ்வை வாழ்த்தி பேசினர்.



இந்நிலையில், இந்த நிகழ்வில், எஸ்.என்.எம்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவரும், நூலக வாசகர் வட்டத் தலைவருமான பேரா.க.லெனின்பாரதி வாசகர் மன்றத்தை துவக்கி வைத்து "வாசிப்பின் அவசியம்'' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, அறிவை விரிவு செய்யவும், ஒருவரின் தனித்துவத்தை வெளிக்கொணரவும், கருணை கொண்ட மனிதராய் வாழவும், ஆழ்மன அமைதிக்கும், ஆக்கத்திறன், கற்பனைத்திறன், சீரிய சிந்தனைகள் வளரவும், பகுத்தறியும் தன்மை வளரவும், நினைவாற்றல் கூடவும், மனதை உற்சாகப்படுத்தவும்,

மனம் புத்தாக்கம் பெறவும், தனிமையை வெல்வதற்கும், கவனத்தை கூர்மையாக்கவும், தகவலறிவு மேம்படவும், சொற்களஞ்சியத்தை வளப்படுத்தவும், கருத்துகளை சரியான முறையில் வெளிப்படுத்தவும், ஒருவர் சிறந்த சமூக ஆளுமையாக வளரவும் புத்தக வாசிப்பும், நூலக பயன்பாடும் மிக மிக அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.



மேலும் பல்வேறு அறிஞர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் முடிவில் வாசகர் மன்ற மாணவர் பொறுப்பாளர் J. ஜெரோம் ஹில்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...