கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - 2 பெண் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

இரும்பொறை பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவரிடம் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் பணம் பெற்ற பெண் ஊழியர்கள் சுபஹான் நிஷா மற்றும் சாந்தி ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றி வருபவர் சுபஹான் நிஷா மற்றும் கருவூல அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் சாந்தி.

இந்நிலையில் கோவை இரும்பொறை பகுதியை சேர்ந்த சுதர்சனிடம் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை சில மாதங்களுக்கு முன் பெற்றுள்ளனர். இதனையடுத்து சில தினங்களுக்கு முன் அரசு பணி நியமன ஆணையை அளித்துள்ளனர்.

சுதர்சன் அதனை கொண்டு பணிக்கு மேற்படி வேலைகளை பார்த்த போது அந்த பணி நியமன ஆணை போலியானது என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சுதர்சன் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் பெண் ஊழியர்கள் இருவர் மீதும் போலியான ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சுதர்சனிடம் பெற்ற 4 லட்சம் ரூபாயை இருவரும் திருப்பி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...