நீலகிரி உதகை அருகே பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1,800 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1800 ரூபாய் லஞ்சம் வாங்கிய கீழ்குந்தா பேரூராட்சி இளநிலை பொறியாளர் ஜெயலட்சுமிக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பள்ளிமனை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார். இவர்தனது தொழிலாளர் குடியிருப்புக்கு பெயர் மாற்று சான்றிதழ் வழங்க கோரி கீழ்குந்தா பேரூராட்சியின் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த ஜெயலட்சுமி என்பவரை அணுகியுள்ளார்.

இந்நிலையில் பெயர் மாற்று சான்றிதழ் வழங்குவதற்காக சிவக்குமாரிடம் ஜெயலட்சுமி 1800 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சிவக்குமார் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் தெரிவித்த நிலையில், ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து ஜெயலட்சுமியிடம் கொடுக்க செய்தனர்.

அப்போது மறைந்திருந்தலஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக ஜெயலட்சுமியை பிடித்து கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை உதகையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், லஞ்சம் கேட்டதற்காக 3 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், லஞ்சம் பெற்றதற்காக 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என மொத்தம் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமாகவிதித்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து,இளநிலை பொறியாளரான 60 வயதான ஜெயலட்சுமி, கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...