நீலகிரி உதகை அருகே பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1,800 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1800 ரூபாய் லஞ்சம் வாங்கிய கீழ்குந்தா பேரூராட்சி இளநிலை பொறியாளர் ஜெயலட்சுமிக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பள்ளிமனை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார். இவர்தனது தொழிலாளர் குடியிருப்புக்கு பெயர் மாற்று சான்றிதழ் வழங்க கோரி கீழ்குந்தா பேரூராட்சியின் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த ஜெயலட்சுமி என்பவரை அணுகியுள்ளார்.

இந்நிலையில் பெயர் மாற்று சான்றிதழ் வழங்குவதற்காக சிவக்குமாரிடம் ஜெயலட்சுமி 1800 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சிவக்குமார் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் தெரிவித்த நிலையில், ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து ஜெயலட்சுமியிடம் கொடுக்க செய்தனர்.

அப்போது மறைந்திருந்தலஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக ஜெயலட்சுமியை பிடித்து கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை உதகையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், லஞ்சம் கேட்டதற்காக 3 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், லஞ்சம் பெற்றதற்காக 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என மொத்தம் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமாகவிதித்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து,இளநிலை பொறியாளரான 60 வயதான ஜெயலட்சுமி, கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...