திருப்பூர் பல்லடம் அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு.

செம்மிபாளையம் அருகே தனியார் பனியன் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்தின் மீது மற்றொரு தனியார் பேருந்து மோதிய விபத்தில், பனியன் நிறுவன பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் அருகே தனியார் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக பல்லடம் மற்றும் செம்மிபாளையம் பகுதியில் இருந்து பேருந்தின் மூலம் ஊழியர்களை அழைத்துச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ஊழியர்களை அழைத்துச் செல்லும் பேருந்து பல்லடம் பகுதியில் பணியாட்களை ஏற்றிக் கொண்டு செம்மிபாளையம் சென்று அங்கிருந்த ஊழியர்கள் என 20க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது.

பேருந்தை ஓட்டுனர் அபூர்வராஜ் என்பவர் இயக்கி வந்துள்ளார். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து, பனியன் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பனியன் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்து, சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.



விபத்தினை பார்த்த அப்பகுதி மக்கள் பல்லடம் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்து விட்டு பேருந்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின் காரணமாக கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...