பல்லடம் அருகே ஓடும் காரில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன்- மனைவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன் - மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது தனது மனைவி ராஜேஸ்வரியுடன், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காமநாயக்கன்பாளையத்த்தை அடுத்த வதம்பச்சேரி பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.



காமநாயக்கன்பாளயம் அருகே கார் வந்தபோது முன்பகுதியில் திடீரென புகை வர தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் உடனடியாக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியுடன் அவசர அவசரமாக கிழே இறங்கி உயிர் தப்பினார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.



இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...