திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன் - மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது தனது மனைவி ராஜேஸ்வரியுடன், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காமநாயக்கன்பாளையத்த்தை அடுத்த வதம்பச்சேரி பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.
காமநாயக்கன்பாளயம் அருகே கார் வந்தபோது முன்பகுதியில் திடீரென புகை வர தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் உடனடியாக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியுடன் அவசர அவசரமாக கிழே இறங்கி உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.