கோவையில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் - உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில் சிறப்பு குழுவைக் கொண்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இங்கு மக்காச்சோளம், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் உள்ளிட்ட வேளாண் பயிர்கள், தோட்டக்கலைத்துறை பயிர்களான சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, பீட்ரூட் வெண்டை பந்தல் சாகுபடி பயிர்களாக பீர்க்கன், பாகற்காய் புடலை சுரைக்காய் என பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.



வட கிழக்கு பருவ மழை தொடங்கி நிலையில், கடந்த ஓருவாரத்தில் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும், நடவு செய்த நாற்றுக்களும் கடுமையாக பாதித்துள்ளன.



பயிர்கள் வளர்ச்சி பாதித்ததோடு வயல்களில் தேங்கிய மழை வெள்ளம் காரணமாக வேர்கள் அழுகி சாய்ந்துள்ளன. கன மழைக்கு தாங்காமல் காய்கறி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் முழுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.



தக்காளி செடிகள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. வெங்காய பயிர்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. பீட்ரூட், வெண்டை, கத்தரி, கொத்தமல்லி என அனைத்து காய்கறிகளும் கன மழையால், அழுகியும், மகசூல் இல்லாமல் பாதித்துள்ளது.

ஒவ்வொரு பயிர் சாகுபடிக்கும் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட கூடுதலாக மழை பெய்து வயல்களில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்காச்சோளம், நெல், காய்கறி பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ளன.



பொருளாதார சேத நிலையை தாண்டி அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுவானது, அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பி முழுமையான நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.

மேலும், பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...