கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குழந்தைகள் தின கொண்டாட்டம் - குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி உற்சாகம்

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேரு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், ராஜஸ்தான் எம்.எல்.ஏ மதன் பிரஜாபத் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், இனிப்புகளை வழங்கினார்.



கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.



இதில் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் மதன் பிரஜாபத் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களையும் இனிப்புகளையும் வழங்கினார்.



மேலும் இந்த நிகழ்வில், ஜவஹர்லால் நேருவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...