கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குழந்தைகள் தின கொண்டாட்டம் - குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி உற்சாகம்

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேரு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், ராஜஸ்தான் எம்.எல்.ஏ மதன் பிரஜாபத் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், இனிப்புகளை வழங்கினார்.



கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.



இதில் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் மதன் பிரஜாபத் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களையும் இனிப்புகளையும் வழங்கினார்.



மேலும் இந்த நிகழ்வில், ஜவஹர்லால் நேருவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...