9 மாதம் முதல் 15 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்


9 மாதம் முதல் 15 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.



கோவை மாநகராட்சி ராமலிங்க காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று பொது சுகாதாரத்துறை மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்து தெரிவிக்கையில்,

தமிழகத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்றிலிருந்து வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 1987 மையங்களில் சுமார் 7.8 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடைபெறுகிறது. 



இப்பணிக்கென சுகாதாரத்துறையின் மூலம் 450-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத் துறையின் மூலம் 966 பணியாளர்களும், 2000-க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்களும் இம்முகாமில் பங்குபெற்று பணியாற்ற உள்ளார்கள்.

மேலும், அனைத்து பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட காவல்துறை, ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இந்திய செஞ்சிலுவைச்சங்கம், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. 



மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் இச்சிறப்பு முகாம் குறித்தும் பெற்றோர்களுக்கு தடுப்பூசி நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் ஒளிப்பெருக்கி, குறுந்தகடுகள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதேபோல், பள்ளிகளில் மாணவ மாணவியர்களிடமும் இதன் அவசியத்தினை தெரிவித்து வீட்டிலுள்ள பெற்றோரிடம் தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மட்டுமின்றி பள்ளிகளுக்கு வராத குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

இதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருந்து மாவட்டத்தில் ஒரு குழந்தைகூட விடுபடாத வகையில் தடுப்பூசி போட்டு ஆரோக்கியத்தினை பாதுகாத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின் ஜோ, துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) பானுமதி, மாநகராட்சி மருத்துவ அலுவலர் சந்தோஷ் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பிஐடி மற்றும் சர்வதேச மூன்றாவது துணைத் தலைவர் (பரிந்துறை) பிஎம்ஜேஎப் லையன் ஜி.ராமசாமி, லையன்ஸ் கிளப்பின் சார்பில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்கள் குறித்து தயாரிக்கப்பட்ட விளம்பர குறுந்தகட்டினை (சிடி) வெளியிட்டார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...