கோவையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் - குறைகளை முன்வைத்த குடும்பத்தினர்

முன்னாள் ராணுவ வீரர்கள், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுக்கான குறைகளை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.


கோவை: மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் தக்சின் பாரத் ஏரியா சார்பில் முன்னாள் ராணுவத்தினர், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் கோவை எஸ்.என்.ஆர் கலை அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராணுவ உயர் அதிகாரிகளிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

இதில் ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் உள்ள குறைகளை முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கைகளாக முன் வைத்தனர்.

இந்த குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் குமார், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...