நீலகிரி அருகே கெத்தை மலைப் பாதையில் அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானைகள் - பரபரப்பு

கெத்தை மலைப்பாதையில் காட்டு யானைகள் வழிமறிக்கும் சம்பவங்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வனத்துறை எச்சரிக்கை.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இருந்து மஞ்சூர், கெத்தை, காரமடை வழியாக கோவை செல்லும் மூன்றாவது மாற்றுபாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதிக்கு கடந்த சில நாட்களாக யானை கூட்டங்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு வந்துள்ள யானைக் கூட்டங்கள் கெத்தை மலைப்பாதையில் அடிக்கடி முகாமிடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளையும் அச்சறுத்தி வருகின்றன.



இந்த நிலையில் இன்று காலை மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தை யானை கூட்டம் வழிமறித்ததுடன் நீண்ட நேரமாக பேருந்து செல்ல வழி விடாமல் சாலையின் நடுவில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



யானைகளை கண்டு அச்சமடைந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை உடனடியாக அதே இடத்தில் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அரை மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் சாலையில் இருந்து விலகிச் சென்றதை தொடர்ந்து, அரசு பேருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றது.

அரசு பேருந்தை யானைகள் வழிமறித்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கெத்தை மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...