நீலகிரி உதகையில் மழை சேதங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் ஆய்வு

உதகையில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் மழை சேதங்களை ஆய்வு செய்த ஆட்சியர் அம்ரித், மழைநீரை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



நீலகிரி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

உதகை நகரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் அருகிலுள்ள சாலைகளுக்கும் குடியிருப்புகளுக்கும் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



மேலும் உதகை பேருந்து நிலையத்திலிருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் மழை நீர் அதிகமாக தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அப்பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி மழை நீர் சாலைக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...