திருப்பூர் பல்லடத்தில் பட்டப்பகலில் வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு - வைரலாகும் வீடியோ

பல்லடம் அருகே மில் ஒன்றில் பணியாற்றி வரும் வடமாநில இளைஞர் தௌஃபிக்கை மர்ம நபர்கள் மூவர் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேட்டு தோட்டத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு அரவை மில் செயல்பட்டு வருகிறது.

இந்த மில்லில் உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த தவுஃபிக்(37) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர், நேற்று மதியம் தேநீர் குடிப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் மூன்று பேர் திடீரென தவுஃபிகை கல்லால் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தௌஃபிக் மில்லுக்கு சென்று நடந்தவற்றை மில் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து காயமடைந்த தவுபிஃகை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் சம்பவம் குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே வடமாநில தொழிலாளி தாக்கப்பட்டு செல்போன் பறிக்கும் சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...