திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிடிபட்ட 4 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பை வனத்துறையினரிடம் பொதுமக்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.
திருப்பூர்: பல்லடம் மங்கலம் சாலையில் செந்தூரான் காலனி உள்ளது.அப்பகுதியில் மண்ணுளி பாம்பு ஊர்ந்து செல்வதை கண்ட பொதுமக்கள் அதனை பிடித்து பத்திரமாக வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினரிடம் மண்ணுளி பாம்பை பொதுமக்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.
4 கிலோ எடையும் 2 அடி நீளமும் இருந்த மண்ணுளி பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக வனத்துறையினர் எடுத்து சென்றனர்.
மண்ணுளி பாம்புக்குள் தனிம பொருளான இரிடியம் இருப்பதாகவும் பல கோடி ரூபாய் பெரும் என்பதால் அவற்றை கடத்தும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.