பொள்ளாச்சியில் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு, ஏற்பாடுகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வரும் 27ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதல்நிலை கலந்தாய்வு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில், வேலைவாய்ப்பு முகாமை நடத்துவதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.

மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில், வேலைவாய்ப்பு முகாமை நடத்துவதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.
மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.