வடவள்ளி அருகே உள்ள பொம்மனம்பாளையம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மாணவி படுகாயம்.அடைந்தார். தற்போது, அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (17). தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த நிவேதா வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவி கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது, அங்கு பயன்பாடற்ற நிலையில் இருந்த பழமையான வீட்டின் சுவர் மழையால் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து மாணவியின் மீது இடிபாடுகள் விழுந்ததில் சிக்கிய மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது, அவர் கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த நிவேதா வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவி கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது, அங்கு பயன்பாடற்ற நிலையில் இருந்த பழமையான வீட்டின் சுவர் மழையால் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து மாணவியின் மீது இடிபாடுகள் விழுந்ததில் சிக்கிய மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது, அவர் கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.