காந்திபுரம் ராம் நகர் பகுதியில் திரையரங்கு அருகே சபரி பாலன் என்பவர் லாட்டரி விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், இவர் கோவை பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கோவை: கோவை காந்திபுரம் ராம் நகர் பகுதியில் திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது ,லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் ஒருவர் பிடிபட்டார்.
விசாரணையில், அவர் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சபரி பாலன் என்பது தெரியவந்தது. மேலும், இவர் கோவை பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து,
அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்ததுடன், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரது கைதை தொடர்ந்து காந்திபுரம் மற்றும் சிவானந்தா காலனி பேருந்து நிலையம் வரும் நபர்களை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லாட்டரி விற்ற குற்றத்துக்காக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பாஜக மீது விமர்சனத்தை ஓங்க செய்துள்ளது.
விசாரணையில், அவர் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சபரி பாலன் என்பது தெரியவந்தது. மேலும், இவர் கோவை பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து,
அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்ததுடன், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரது கைதை தொடர்ந்து காந்திபுரம் மற்றும் சிவானந்தா காலனி பேருந்து நிலையம் வரும் நபர்களை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லாட்டரி விற்ற குற்றத்துக்காக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பாஜக மீது விமர்சனத்தை ஓங்க செய்துள்ளது.