கோவை அருகே தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை கணபதி பகுதியை சேர்ந்த கோவில்பிச்சை என்பவரது மகனான காட்சன் என்பவர் துடியலூர் பகுதியில் பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுள்ளார்.
இதனிடையே காட்சன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் அதனடிப்படையில் காட்சன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் காட்சனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்த காட்சனால் ஒரு வருடத்துக்கு ஜாமினில் வெளி வர முடியாது என்பது குறிபிடத்தக்கது.
இதனிடையே காட்சன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் அதனடிப்படையில் காட்சன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் காட்சனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்த காட்சனால் ஒரு வருடத்துக்கு ஜாமினில் வெளி வர முடியாது என்பது குறிபிடத்தக்கது.