திருப்பூரில் மனித சங்கிலி மூலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

திருப்பூரில் முக்கிய நான்கு பகுதிகளில் சாலை பாதுகாப்பின் அவசியத்தை கொண்டு செல்லும் விதமாக மனித சங்கிலி மூலம் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வை போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியை மாணவ-மாணவிகள் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் அவினாசி ரோடு, பி.என்.ரோடு, காலேஜ் ரோடு, ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட 4 இடங்களில் கட்டாயம் தலைக்கவசம் அணிவது, மது குடித்துவிட்டு, செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, அதிவேகமாகவும், ஒருவழிப் பாதையிலும் செல்லக்கூடாது, சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மனித சங்கிலியாக நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.



இதற்கு முன்னதாக சாலை விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகள் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...