நீலகிரியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒருபோதும் மூடப்படாது - நீலகிரி எம்.பி ஆ.ராசா உறுதி

நஷ்டத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் மூடப்படுவதாக வெளியான வதந்தியால் ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்ட நிலையில், மூடப்படாது என திமுக எம்.பி ஆ.ராசா தகவல்.



நீலகிரி: தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் தொழிற்சாலை மூடப்படுவதாக சிலர் வதந்திகளை பரப்பி வந்த நிலையில், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.



இந்நிலையில் இதுதொடர்பாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தலைமையில், தொழிற்சங்க தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது,



தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒருபோதும் மூடப்படாது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை வெளியேற்றுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஒருபோதும் அவர்களை வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு கிடையாது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித்தர அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை புனரமைக்க தனியார் நிறுவன மதிப்பீட்டு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்ப்படும்.

இதனையடுத்து அதற்கான நிதி ஒதுக்கி தேயிலை தோட்ட கழகம் புனரமைக்கப்பட்டு, கூடுதலாக தேயிலை தோட்ட தொழிலாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை, தலைமை வன பாதுகாவலர் சையது முஜிமில் அப்பாஸ், நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...