திருப்பூரில் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த வழக்கு - விடுதி நிர்வாக அறங்காவலர், காப்பாளர் ஆகியோர் கைது

திருமுருகன்பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலயத்தில் கடந்த மாதம் கெட்டுப்போன உணவை உண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த வழக்கில் விடுதி அறங்காவலர் உட்பட 2 பேர் கைது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்தா சேவாலய குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக அறங்காவலராக செந்தில்நாதன் (58) என்பவர் இருந்து வருகிறார். மேலும், விடுதி காப்பாளராக (வார்டன்) கோபி கிருஷ்ணன் (54) என்பவர் பணியாற்றி வந்தார்.



இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் உள்பட 15 சிறுவர்கள் தங்கி, அருகேயுள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இரவு காப்பகத்தில் இருந்த 14 சிறுவர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மாதேஷ் (15), பாபு (13), ஆதிஷ் (8) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பாதிக்கப்பட்ட 11 சிறுவர்கள் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.





இந்த சம்பவம் திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன் மாணவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்ததுடன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தை பார்வையிட்டு, அதை மூடவும் உத்தரவிட்டார்.



இதையடுத்து விவேகானந்தா சேவாலயம் மூடப்பட்டு, கடந்த ஒரு மாதமாக காப்பகத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உயிரிழந்த சிறுவர்களின் உடற்பாகங்கள் மற்றும் உணவு மாதிரிகள்‌ பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பபட்டிருந்தது. அந்த சோதனையில் உணவில் விஷம் கலக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

எனவே அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காப்பகத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன்(58) மற்றும் விடுதி காப்பாளர் கோபி கிருஷ்ணன் (54) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...