கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ள நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.



கோவை: மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.



இக்கூட்டத்தில், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை வரவேற்பு, கட்சி சார்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கோவை மாவட்டத்தில் திமுக அலுவலகம் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கட்சி செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கூட்டத்தில், கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிப்பார்கள் எனவும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கட்சி சார்பில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், நகர, பகுதி, ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...