வீட்டை அபகரித்துக் கொண்ட தெருவில் விட்ட மகள் - கருணை கொலை செய்யக்கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மூதாட்டி மனு

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி மும்தாஜ், தனது மகள் அனீஷ் ஆரிஃபா வீட்டை அபகரித்துக் கொண்டு வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கியதால் தன்னை கருணை கொலை செய்யும்படி ஆட்சியரிடம் மனு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகேயுள்ள பெஸ்ட் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ். இவர் தனக்கு சொந்தமான வீட்டை தனது மகளே அபகரித்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



அவரது மனுவில் தெரிவித்துள்ளதாவது, நானும் எனது கணவரும் எங்களது சொந்த உழைப்பில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கி வசித்து வந்தோம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கணவர் இறந்துவிடவே நான் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தேன்.

மேற்கொண்டு இருந்த மற்றொரு வீட்டின் வாடகையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தேன். இந்த நிலையில், எனது மூத்த மகள் அனீஸ் ஆரிபா மற்றும் அவரது கணவர் உமர் ஷரீஃப் என்னை பார்த்துக் கொள்வதாக கூறி வீட்டில் குடியேறினர்.

பின்னர் காலப்போக்கில் மகளும் மருமகளும் சேர்ந்து என்னை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர். இதனால் நான் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறேன்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு முறை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளேன். இந்த மனுக்கள், தற்போது தாசில்தார் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதால் மாத்திரை இன்றி வாழ முடியாத நிலையில், அந்த வீட்டில் இருந்து அவர்களை வெளியேற்றி தனது வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். இல்லையேல் கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...