வீட்டை அபகரித்துக் கொண்ட தெருவில் விட்ட மகள் - கருணை கொலை செய்யக்கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மூதாட்டி மனு

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி மும்தாஜ், தனது மகள் அனீஷ் ஆரிஃபா வீட்டை அபகரித்துக் கொண்டு வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கியதால் தன்னை கருணை கொலை செய்யும்படி ஆட்சியரிடம் மனு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகேயுள்ள பெஸ்ட் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ். இவர் தனக்கு சொந்தமான வீட்டை தனது மகளே அபகரித்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



அவரது மனுவில் தெரிவித்துள்ளதாவது, நானும் எனது கணவரும் எங்களது சொந்த உழைப்பில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கி வசித்து வந்தோம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கணவர் இறந்துவிடவே நான் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தேன்.

மேற்கொண்டு இருந்த மற்றொரு வீட்டின் வாடகையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தேன். இந்த நிலையில், எனது மூத்த மகள் அனீஸ் ஆரிபா மற்றும் அவரது கணவர் உமர் ஷரீஃப் என்னை பார்த்துக் கொள்வதாக கூறி வீட்டில் குடியேறினர்.

பின்னர் காலப்போக்கில் மகளும் மருமகளும் சேர்ந்து என்னை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர். இதனால் நான் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறேன்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு முறை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளேன். இந்த மனுக்கள், தற்போது தாசில்தார் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதால் மாத்திரை இன்றி வாழ முடியாத நிலையில், அந்த வீட்டில் இருந்து அவர்களை வெளியேற்றி தனது வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். இல்லையேல் கருணை கொலை செய்து விடுங்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...