திருப்பூரில் ரூ.1.2 கோடி மதிப்பிலான துணை மின்நிலையத்தை திறந்து வைத்த ஆட்சியர் வினீத்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 1.2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 16 mva திறன் கொண்ட துணை மின் நிலையத்தின் மூலம் 12கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 1.2 கோடி செலவில், 16 mva திறன் உள்ள துணை மின் நிலையம் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள துணை மின் நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் இன்று ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.



இந்த 16 mva திறன் கொண்ட துணை மின் நிலையம் மூலம் 12கிலோமீட்டர் சுற்றளவுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும். இதில் வீடுகள், தொழில் நிறுவனங்கள் என 6,500 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...