தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதுபோல மாய தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சி - கோவையில் அமைச்சர் மனோதங்கராஜ்

2030க்குள் தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியனை எட்ட முடிவு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை செய்து வருவதாக அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்.


கோவை: கோவை மாவட்டம் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மனோ தங்கராஜ், செய்தியாளர்களிடம் பேசியதாவது, 2030ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியனை எட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

கோவை மாநகரம் மிகச்சிறந்த வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு சார்டட் அக்கவுண்ட்ஸ் (Charted Accounts) தேவை உள்ளது. தமிழகத்தில் ஒரு சிலர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது போன்று மாயத் தோற்றத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்கிறார்கள் அது தோற்றுப் போகும்.

கோவை மாவட்டத்தில் மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் "நான் முதல்வன்" திட்டத்தை அறிமுகப்படுத்தி திறன் மேம்பாட்டிற்கு முக்கிய கவனத்தை செலுத்தி வருகிறார். பிற நாடுகள் பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்தில் உள்ள மின் கட்டணம் நியாயமான மின் கட்டணம் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...