திருப்பூர் பல்லடம அருகே ஆட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு - சிறுத்தையாக இருக்குமோ என மக்கள் அச்சம்

பல்லடம் அருகே மர்ம விலங்கு ஒன்று ஆட்டை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது சிறுத்தையாக இருக்கலாம் என பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்ல்டத்தை அடுத்த கரடிவாவி பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பையே முக்கிய தொழிலாக மக்கள் செய்து வருகின்றனர்,

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தோட்டத்து பகுதியை மர்ம விலங்கு ஒன்று கடந்து சென்றது. அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் விலங்கு கடந்து சென்றது பதிவாகியிருந்தது.



அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் விலங்கின் காலடி தடத்தை ஆய்வு செய்தனர். அந்த மர்ம விலங்கு சிறுத்தையா அல்லது வேறு ஏதும் விலங்காக என உறுதியாக தெரியவில்லை என கூறிவிட்டு சென்றனர்.



இந்நிலையில் இன்று கரடிவாவியில் உள்ள ஒட்டந்தோட்டத்தில் பச்சியம்மாள் என்பவருடைய ஆடு மர்மமான முறையில் இறந்து கிடந்தது. ஆட்டின் கழுத்தில் மர்ம விலங்கின் பல் தடம் ஆழமாக பதிந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது,

ஏற்கனவே சிறுத்தை போன்ற மர்ம விலங்கு நடமாட்டம் வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், தற்போதுஒரு ஆடு பலியாகியுள்ளது. வனத்துறை உடனடியாகமர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆட்டை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு, சிறுத்தையாக இருக்குமோ என பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...