கோவை சிங்காநல்லூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு...!

சிங்காநல்லூர் அருகே கார் வந்த போது திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. பின்னர், மளமளவென தீ பிடித்து எரியத் துவங்கியது. சூலூர் தீயணைப்பு துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இன்று இரவு இவர் தனது காரில் கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது கோவை, சிங்காநல்லூர் அருகே வந்த போது திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த அவர், உடனே காரை நிறுத்தியுள்ளார். பின்னர், காரின் முன்பகுதியில் மளமளவென தீ பிடித்து எரியத் துவங்கியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் தீயணைப்பு துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், காரின் சில பகுதிகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...