கோவை சிங்காநல்லூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு...!

சிங்காநல்லூர் அருகே கார் வந்த போது திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. பின்னர், மளமளவென தீ பிடித்து எரியத் துவங்கியது. சூலூர் தீயணைப்பு துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இன்று இரவு இவர் தனது காரில் கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது கோவை, சிங்காநல்லூர் அருகே வந்த போது திடீரென்று காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த அவர், உடனே காரை நிறுத்தியுள்ளார். பின்னர், காரின் முன்பகுதியில் மளமளவென தீ பிடித்து எரியத் துவங்கியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் தீயணைப்பு துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், காரின் சில பகுதிகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...