கோவை உக்கடம் அருகே பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் இருந்து 4 அடி ஐம்பொன் முருகன் சிலை மீட்பு

கோவை உக்கடம் – செல்வபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் ஐம்பொன் முருகன் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின்படி விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது.



கோவை: கோவை உக்கடம் – செல்வபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் இருந்து 4 அடி ஐம்பொன் முருகன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் கோவில் சிலை உள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட போலீஸார், அவரது வீட்டில் சோதனையிட்டனர்.



சுமார் 3 மணி நேர சோதனையின் போது வீட்டில் இருந்த சுமார் 4 அடியுள்ள ஐம்பொன் முருகன் சிலை இருந்தது தெரியவந்தது.



அந்த சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் பாஸ்கரன் சுவாமி, தான் சிலை செய்யும் பணிகளை செய்து வருவதாகவும், வீட்டில் கண்டறியப்பட்ட சிலையும் அவரே செய்த சிலை என தெரிவித்ததாகவும், இது குறித்த விடியோவையும் போலீசாரிடம் காட்டியதாக தெரிகிறது.



இருப்பினும், சிலையின் பழமை தன்மை மற்றும் மற்ற விவரங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...