கோவையில் 6 கிலோ தங்க நகைகளுடன் மாயமான நகைக்கடை ஊழியர் - போலீசார் வலைவீச்சு

கோவை ராஜவீதியில் உள்ள வசந்த் ஜுவல்லரியில் இருந்து ஹைதராபாத்துக்கு 6 கிலோ அளவிலான நகைகளை எடுத்துச் சென்ற ஊழியர் நடராஜன் செல்போனை அணைத்துவிட்டு மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: கோவை ராஜவீதியில் ஏராளாமான நகை கடைகள், நகை பட்டறைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து அண்டை மாநிலம் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் தங்க நகைகள் ஆபரணமாக்கி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பெண்களை ஈர்க்கும் வகையிலான டிசைன்களை செய்து நகை ரீடைல் மற்றும் ஹோல் சேல் வியாபாரத்தில் சிறந்து விளங்கும் தொழில் நகரங்களில் கோவைக்கு தனியிடம் உண்டு.

இந்த நிலையில் கோவை ராஜவீதியில் ரோகினி வசந்த் எனபவருக்கு சொந்தமான வசந்த் ஜுவல்லரி என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது. இதனிடையே வசந்த் ஜுவல்லரிக்கு ஹைதராபாத்தில் இருந்து பல்வேறு நகை ஆர்டர்கள் வந்திருக்கின்றன.

அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி (18-10-2022) அன்று கடையிலிருந்து தங்க நகை ஆபரணங்களை ஹைதராபாத்திற்கு அக்கடையின் ஊழியரான நடராஜன் விநியோகம் செய்வதற்காக எடுத்து சென்றுள்ளார். கோவையை சேர்ந்த நடராஜன் இந்த நகை கடையில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள சில நகைக்கடைகள் ஆர்டர் தந்திருக்கும் நிலையில், அவர்களிடம் நகைகளை ஒப்படைத்து விட்டு ரசீது பெற்று பண பரிவர்த்தனையை பாலோ செய்வது தான் இவரது பணி.

இந்த நிலையில் 6,273 கிராம் தங்க நகைகளுடன் நடராஜன் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், நகைகளை ஆர்டர் தந்த கடைகளுக்கு ஒப்படைக்காமல் நடராஜன் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு மாயமானதாக கூறப்படுகிறது.

அவர் எடுத்துச் சென்ற நகைகளின் மதிப்பு சுமார் 3 கோடி ஆகும். இது குறித்து தங்க நகை கடை உரிமையாளர் ரோகினி வசந்த் அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை தேடி வருகின்றனர்.

3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளுடன் நகைக்கடையில் பணியாற்றிய ஊழியரே மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...