குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்ட குடும்பம்

குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் ஏற்பட்ட தடுப்பு சுவர் இடிந்த சம்பவத்தில் சிக்கிக்கொண்ட குடும்பத்தை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு குழுவினர் மீட்டனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் ஷர்மிளா, சலாம் உல்லா, உபையதுல்லா, ஆகியோர் வசித்து வருகின்றனர்.



கடந்த வியாழக்கிழமை பழமையான தடுப்பு சுவர் ஒன்று குடியிருப்பு பகுதியில் இடிந்து விழுந்தது, இதில் சமி முல்லா என்பவரது வீடு சேதம் அடைந்தது வீட்டினுள் இருந்த ஷர்மிளா, சலாம் உல்லா, உபையதுல்லா, ஆகிய மூவர் சிக்கிக்கொண்டனர்.



இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, குன்னூர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் இரண்டு மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்டு மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

கற்கள் விழுந்ததில் வீட்டின் கதவு மூடிக் கொண்டதால் உள்ளே இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் போனதாகவும் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இ்ல்லை என்று தீயணைப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...