குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் ஏற்பட்ட தடுப்பு சுவர் இடிந்த சம்பவத்தில் சிக்கிக்கொண்ட குடும்பத்தை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு குழுவினர் மீட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் ஷர்மிளா, சலாம் உல்லா, உபையதுல்லா, ஆகியோர் வசித்து வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை பழமையான தடுப்பு சுவர் ஒன்று குடியிருப்பு பகுதியில் இடிந்து விழுந்தது, இதில் சமி முல்லா என்பவரது வீடு சேதம் அடைந்தது வீட்டினுள் இருந்த ஷர்மிளா, சலாம் உல்லா, உபையதுல்லா, ஆகிய மூவர் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, குன்னூர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் இரண்டு மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்டு மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
கற்கள் விழுந்ததில் வீட்டின் கதவு மூடிக் கொண்டதால் உள்ளே இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் போனதாகவும் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இ்ல்லை என்று தீயணைப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.