சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நினைவு சுவர் எழுப்ப மண் எடுக்க இயக்குநர்கள் திருப்பூர் வருகை - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நினைவு சுவர் எழுப்ப மண் எடுக்கும் நிகழ்விற்காக திருப்பூருக்கு வருகை தந்த திரைப்பட இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர்வி உதயகுமாருக்கு உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



திருப்பூர்: சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட 1,040 வீரா்களின் நினைவை போற்றும் வகையில் நாட்டில் 75 இடங்களில் நினைவு சுவா் எழுப்பப்பட உள்ளது. இந்த நினைவு சுவா்களை எழுப்ப சுதந்திர போரட்ட வீரா்களின் நினைவிடங்களில் மண் எடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஊர்களில் மண் சேகரிக்கும் நிகழ்வாக தாய்மண் யாத்திரை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் சக்ரா விசன் இந்தியா பவுண்டேசன் சார்பில் நடைபெற்று வருகிறது.



இதனையொட்டி திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள பொங்காளி முதலியார் நினைவு இடத்திற்கு வருகை தந்த இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார், பேரரசு, லிங்குசாமி, உள்ளிட்டோர் பொங்காளி முதலியார் திருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதனையடுத்து அவரது சொந்த ஊரான இடுவம்பாளையத்தில் இயக்குநர்கள் மண்ணை சேகரித்து சென்றனர். முன்னதாக இடுவம்பாளையம் பகுதிக்கு வந்த இயக்குனர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...