பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் உலா வந்த சிறுத்தை - சிசிடிவி காட்சியால் பரபரப்பு

பல்லடம் அடுத்த கரடிவாவி குட்டை பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டத்தை சிலர் கண்ட நிலையில் சிசிடி காட்சி மற்றும் காலடி தடத்தை கொண்டு சிறுத்தை என உறுதி செய்யப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சிறுத்தை உலா வந்ததாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் அடுத்த கரடிவாவி கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் விசைத்தறி உள்ளிட்டவை பிரதான தொழிலாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் நந்தவன தோட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை எற்படுத்தி உள்ளது.

நேற்று நள்ளிரவு மர்மமான விலங்கு ஒன்று தோட்டத்தை கடந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தவன குட்டைக்குள் சென்றதை சிலர் பார்த்துள்ளனர். சிறுத்தை போன்று இருப்பதாக சந்தேகம் அடைந்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர்.

அதில், அந்த மர்ம விலங்கு சிறுத்தைதான் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இன்று காலை சிறுத்தையின் காலடி தடங்களை அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மூலம் ஆய்வு செய்ததில், அது சிறுத்தையின் காலடித்தடம் தான் என்பதும் உறுதியானது.

நந்தவன குட்டைக்குள் ஏற்கனவே நரிகள் இருப்பதாக சந்தேகம் இருந்து வந்த நிலையில், தற்போது சிறுத்தையும் உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் இங்கு பிரதானமாக இருப்பதால் கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் ஆபத்தான சூழல் இருந்து வருகிறது.

எனவே, வனத்துறையினர் முகாமிட்டு, சிறுத்தையை குண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...