கோவை கூட்ஸ்செட் சாலையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சுவர் ஓவியம்!


சேலம் டிவிசன் தெற்கு ரயில்வே துறை மற்றும் அறம் பவுண்டேஷன் சார்பில் கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள சுவர்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்களால் சுவர் ஓவியம் வரையப்பட்டது. 



இதனை சுமார் 225க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து ரயில்வே சம்பந்தமான ஓவியங்கள், இயற்கை ஓவியம், உடல் உறுப்பு தானம் குறித்த ஓவியம், மனித உரிமை மற்றும் குழந்தைகளுக்கான கார்டூன் ஓவியம் போன்றவற்றை வரைந்தனர். இதற்கான பெயிண்டிங் மற்றும் இதர தேவைகளை சென்னீஸ் நிறுவனம் வழங்கியது. 

 



இதனை கோவை மாநகர போக்குவரத்துறை துணை ஆணையர் சரவணன் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் மாணவர்கள் சுவர் ஓவியம் வரைவதற்கு சாலை ஓரங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்பு வழங்கினார். இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவதையும் ஊக்குவித்தும் மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார். இதனை கோவை அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட்டின் அறங்காவலர், லதா சுந்தரம் ஒருங்கிணைத்தார்.



Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...