கோவை கூட்ஸ்செட் சாலையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சுவர் ஓவியம்!


சேலம் டிவிசன் தெற்கு ரயில்வே துறை மற்றும் அறம் பவுண்டேஷன் சார்பில் கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள சுவர்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்களால் சுவர் ஓவியம் வரையப்பட்டது. 



இதனை சுமார் 225க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து ரயில்வே சம்பந்தமான ஓவியங்கள், இயற்கை ஓவியம், உடல் உறுப்பு தானம் குறித்த ஓவியம், மனித உரிமை மற்றும் குழந்தைகளுக்கான கார்டூன் ஓவியம் போன்றவற்றை வரைந்தனர். இதற்கான பெயிண்டிங் மற்றும் இதர தேவைகளை சென்னீஸ் நிறுவனம் வழங்கியது. 

 



இதனை கோவை மாநகர போக்குவரத்துறை துணை ஆணையர் சரவணன் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் மாணவர்கள் சுவர் ஓவியம் வரைவதற்கு சாலை ஓரங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்பு வழங்கினார். இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவதையும் ஊக்குவித்தும் மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார். இதனை கோவை அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட்டின் அறங்காவலர், லதா சுந்தரம் ஒருங்கிணைத்தார்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...