பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் பாஜகவினர் சாலை மறியல்..!

கோவை காந்திபுரம் பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.



கோவை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக வினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், கோவை காந்திபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பாஜக வை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அப்போது, திமுகவினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மட்டும் கைது செய்தது ஏன்? என கேள்வி எழுப்பி முழக்கங்களை எழுப்பினர்.



இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாஜகவினரின் திடீர் மறியல் போராட்டம் காரணமாக காந்திபுரம் பகுதியில் சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...