கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாதிரி பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள காதுகேளாதோர் பள்ளி, முதல்வரின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் 110.50 லட்சம் மதிப்பீட்டில் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 72 வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் காதுகேளாதோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது, முதல்வரின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் 110.50 லட்சம் மதிப்பீட்டில் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதற்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



இதனைத் தொடர்ந்து அப்பள்ளி மாணவ - மாணவிகளிடையே பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி. அப்பள்ளியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், பள்ளியில் கூடுதல் ஆய்வுக்கூடங்கள் உணவு அருந்தும் அறை மற்றும் மாணவியர் தங்கும் விடுதி ஆகியவை திட்டத்தில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆன்ந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...