முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் கோவை - மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் உள்ள மலர் அங்காடி புனரமைப்பு பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு, மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் அரசு மலர் அங்காடி அமைந்துள்ளது. இந்த மலர் அங்காடியில் முதல்வரின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் 120 லட்சம் மதிப்பீட்டில் புரனமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிலையில் புனரமைப்பு பணிகள் திட்டத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர், ஜி.எஸ். சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.