பொள்ளாச்சி புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவன், பெண் உட்பட நான்கு பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டு நடவடிக்கை

பொள்ளாச்சி கிழக்கு பகுதியில் இன்று காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலிஸார் கைது செய்தது. இந்த கஞ்சா விற்பனை கைதில் கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் அங்குள்ள வஞ்சியாபுரம் பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கஞ்சா வத்திருந்த வாலிபரை கைது செய்து விசாரித்ததில் அவர் கிணத்துக்கடவு நல்லட்டி பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சூரிய பிரகாஷ் (19) என்பது தெரியவந்தது. இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் ஊஞ்சவேலம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது கஞ்சா விற்றதாக சூலூர் மற்றும் செஞ்சேரி குமாரபாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி சாந்தலட்சுமி (59) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது .

இதே போல் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அங்குள்ள பெட்டதாபுரம் ஆர்ச் அருகே நடத்திய சோதனையில் கஞ்சா விற்றதாக நீலகிரி மாவட்டம் கூடலூர் திருவள்ளூர் நகரத்தை சேர்ந்த பிரதீப் (22) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மேட்டுப்பாளையம் போலீசார் அங்குள்ள ஒரு பேக்கரி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்ததாக அன்னூர் ரோட்டை சேர்ந்த பிரசாந்த் (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கஞ்சா விற்ற குற்றத்துக்காக கைதாகி சிறையில் அடைக்கபட்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...