கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மாடு கடத்தல் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அகில பாரத மக்கள் கட்சியினர் சிவனடியார்களை போல் வேடமணிந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்தனர்.
கோவை: அகில பாரத மக்கள் கட்சியினர் சிவனடியார்களை போல் வேடமணிந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தனர். அப்போது அவர்கள் கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மாடு கடத்தல் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு அளித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அகில பாரத மக்கள் கட்சியின் தலைவர் ராமநாதன் பேசியதாவது, கோவையில் இருந்து பிற மாநிலங்களுக்கு அதிகமாக மாடுகள் கடத்தப்படுகிறது. அவ்வாறு கடத்தப்படும் வாகனங்களில் கஞ்சா உட்பட பல்வேறு போதை பொருட்களும் கடத்தப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து சிவசேனா அமைப்பின் மாநில துணை தலைவர், புழவஞ்சி பேசியதாவது, 1998 குண்டு வெடிப்பில் கோவை நகரம் சுடுகாடு போல் காட்சி அளித்தது. தற்போது நடைபெற்றுள்ள இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சர்வதேச தீவிரவாதிகள். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
பின்னர் இந்து அதிரடி படை தலைவர் ராஜகுரு, இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்படுவதாகவும், தூக்கு தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மனு அளித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அகில பாரத மக்கள் கட்சியின் தலைவர் ராமநாதன் பேசியதாவது, கோவையில் இருந்து பிற மாநிலங்களுக்கு அதிகமாக மாடுகள் கடத்தப்படுகிறது. அவ்வாறு கடத்தப்படும் வாகனங்களில் கஞ்சா உட்பட பல்வேறு போதை பொருட்களும் கடத்தப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து சிவசேனா அமைப்பின் மாநில துணை தலைவர், புழவஞ்சி பேசியதாவது, 1998 குண்டு வெடிப்பில் கோவை நகரம் சுடுகாடு போல் காட்சி அளித்தது. தற்போது நடைபெற்றுள்ள இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சர்வதேச தீவிரவாதிகள். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
பின்னர் இந்து அதிரடி படை தலைவர் ராஜகுரு, இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்படுவதாகவும், தூக்கு தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.