மாடு கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில பாரத மக்கள் கட்சியினர் சிவனடியார்கள் வேடமணிந்து நூதன முறையில் கோவை ஆட்சியரிடம் மனு

கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மாடு கடத்தல் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அகில பாரத மக்கள் கட்சியினர் சிவனடியார்களை போல் வேடமணிந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்தனர்.


கோவை: அகில பாரத மக்கள் கட்சியினர் சிவனடியார்களை போல் வேடமணிந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தனர். அப்போது அவர்கள் கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மாடு கடத்தல் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனு அளித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அகில பாரத மக்கள் கட்சியின் தலைவர் ராமநாதன் பேசியதாவது, கோவையில் இருந்து பிற மாநிலங்களுக்கு அதிகமாக மாடுகள் கடத்தப்படுகிறது. அவ்வாறு கடத்தப்படும் வாகனங்களில் கஞ்சா உட்பட பல்வேறு போதை பொருட்களும் கடத்தப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து சிவசேனா அமைப்பின் மாநில துணை தலைவர், புழவஞ்சி பேசியதாவது, 1998 குண்டு வெடிப்பில் கோவை நகரம் சுடுகாடு போல் காட்சி அளித்தது. தற்போது நடைபெற்றுள்ள இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சர்வதேச தீவிரவாதிகள். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

பின்னர் இந்து அதிரடி படை தலைவர் ராஜகுரு, இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்படுவதாகவும், தூக்கு தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...