கோவையில் போதை பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: காவல் ஆணையாளர், பொதுமக்கள், சைக்கிளர்ஸ் பங்கேற்பு

போதைப்பொருள் இல்லா தமிழகம் எனும் சைக்கிள் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள கோவையை சேர்ந்த விஷ்ணு ராம் என்பவர் ஹைதரபாத்தில் தனது சைக்கிள் பயணத்தை துவக்கி குர்னூல், பெங்களூரு வழியாக கோவை வந்தடைந்தார். இவர், 1000 கி.மீ தூரத்தை 37 மணி நேரம் 53 நிமிடங்களில் பயணித்து சாதனை படைத்துள்ளார்.


கோவை: தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாநகர், புறநகர் பகுதிகளில் போலீசார் தனிப்படை ரோந்து மூலம் போதை பொருள் விற்பனை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருபுறம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் கல்லூரிகளில் மற்றும் பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, போதை பொருட்களின் பயன்பாட்டை தடுக்க கோவையை சேர்ந்த விஷ்ணு ராம் என்பவர் போதைப்பொருள் இல்லா தமிழகம் எனும் சைக்கிள் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, 1000 கிலோ மீட்டர் தூரத்தை 37 மணி நேரம் 53 நிமிடங்களில் பயணித்து சாதனை செய்துள்ளார். ஹைதரபாத்தில் தனது சைக்கிள் பயணத்தை துவக்கிய விஷ்ணுராம் குர்னூல், பெங்களூரு வழியாக கோவை வந்தடைந்தார்.



இன்று கோவை வந்தடைந்த விஷ்ணுராமை, கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.



தொடர்ந்து, அவருடன் ஏர்போர்ட் பகுதியிலிருந்து அவினாசி சாலை வழியாக காவல்துறை ஆணையர் அலுவலகம் வரை ஆணையர் சைக்கிள் ஓட்டிபடி வந்தார்.



சைகிளர்ஸ், பொதுமக்களும் சைக்கிள் ஓட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இது குறித்து விஷ்ணுராம் கூறுகையில், அண்மையில் முதல்வர் கூறிய போதைப்பொருள் இல்லா தமிழகம் எனும் பிரச்சாரத்தை வலியுறுத்தும் விதமாக இந்த சாதனை பயணத்தை துவங்கியதாக தெரிவித்தார்.

குறைந்த நேரத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணம் மூலம் கடந்து சாதனையை விஷ்ணு ராம் படைத்ததாக இண்டியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் தந்திருக்கின்றனர் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...