கொடநாட்டில் காவலாளி ஓம்பகதூர் தலைகீழாக கட்டி வைக்கப்பட்ட மரம் அகற்றம் - உரிய விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் உறுதி

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி ஓம்பகதூரை அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த மரத்தை எஸ்டேட் நிர்வாகம் அனுமதியில்லாமல் அகற்றியுள்ளது.



நீலகிரி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து தலைகீழாக கட்டி வைக்கப்பட்ட மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றியது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் பொது சுகாதார நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி கொடநாடு பங்களாவில் கொள்ளையில் ஈடுபட்ட கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட் 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பங்களாவில் கொள்ளை அடிக்க 8-ஆம் நம்பர் கேட் வழியாக உள்ளே சென்றுள்ளனர்.

பங்களாவின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த லாரியில் இரவு காவலில் இருந்த கிருஷ்ண தாபாவை தாக்கி லாரியில் கட்டி வைத்த அவர்கள், பின்னர் 10-நம்பர் கேட்டில் இருந்த ஓம்பகதூரை அங்கிருந்த மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

தொடக்கத்தில் கோத்தகிரி போலிசார் விசாரித்த அந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலிசார் விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில் ஓம்பகதூர் தலைகீழாக கட்டிவைத்து கொலை செய்யப்பட்ட மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றி இருப்பதும் அதற்கு பதிலாக புதிதாக மரக்கன்று ஒன்றை நட்டு வளர்த்து வருவதும் தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...