தீபாவளிக்காக கோவையில் இருந்து 20 டன் உணவு வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி - விமான நிலைய அதிகாரிகள் தகவல்

தீபாவளி பண்டிகையயொட்டி கடந்த அக்டோபர் 1முதல் 23 ஆம் தேதி வரை கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு 20 டன் எடையிலான இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும் சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகளுக்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடையே அதிக வரவேற்பு இருப்பது வழக்கம். இதனால் அதிக எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த ஆண்டு 23 நாட்களில் 20 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது,

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே கோவை விமான நிலையத்தில் உள்ள சரக்கக அலுவலகத்தில் இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகள் அதிகளவு சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு ஏற்றமதி செய்ய புக்கிங் செய்யப்பட்டன.

முதல் இரண்டு வாரங்களில் வாரம்தோறும் 4.5 டன் எடையிலான இனிப்பு உள்ளிட்ட பல உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டன. மூன்றாவது வாரம் அதாவது அக்டோபர் 17-ல் தொடங்கி, அக்டோபர் 23-ம் தேதி வரை மட்டும் 10 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஷார்ஜா விமானத்தில் மொத்தம் 3 டன், சிங்கப்பூர் விமானத்தில் 7 டன் கொண்டு செல்லப்பட்டன. அக்டோபர் 1-ல் தொடங்கி 23-ம் தேதி வரை இரு நாடுகளுக்கும் மொத்தம் 20 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தாண்டு பல வகை உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் விளக்கு உள்ளிட்ட தீபாவளியை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பல சிறப்பு வடிவங்களிலான இனிப்பு வகைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டன.

எதிர்வரும் நாட்களில் இனிப்பு, கார வகைகளுக்கான புக்கிங் குறைந்து இதர உணவு வகைகள் குறைந்த அளவில் வழக்கம் போல் புக்கிங் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...