தீபாவளிக்காக கோவையில் இருந்து 20 டன் உணவு வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி - விமான நிலைய அதிகாரிகள் தகவல்

தீபாவளி பண்டிகையயொட்டி கடந்த அக்டோபர் 1முதல் 23 ஆம் தேதி வரை கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு 20 டன் எடையிலான இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும் சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகளுக்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடையே அதிக வரவேற்பு இருப்பது வழக்கம். இதனால் அதிக எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த ஆண்டு 23 நாட்களில் 20 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது,

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே கோவை விமான நிலையத்தில் உள்ள சரக்கக அலுவலகத்தில் இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகள் அதிகளவு சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு ஏற்றமதி செய்ய புக்கிங் செய்யப்பட்டன.

முதல் இரண்டு வாரங்களில் வாரம்தோறும் 4.5 டன் எடையிலான இனிப்பு உள்ளிட்ட பல உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டன. மூன்றாவது வாரம் அதாவது அக்டோபர் 17-ல் தொடங்கி, அக்டோபர் 23-ம் தேதி வரை மட்டும் 10 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஷார்ஜா விமானத்தில் மொத்தம் 3 டன், சிங்கப்பூர் விமானத்தில் 7 டன் கொண்டு செல்லப்பட்டன. அக்டோபர் 1-ல் தொடங்கி 23-ம் தேதி வரை இரு நாடுகளுக்கும் மொத்தம் 20 டன் எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தாண்டு பல வகை உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் விளக்கு உள்ளிட்ட தீபாவளியை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பல சிறப்பு வடிவங்களிலான இனிப்பு வகைகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டன.

எதிர்வரும் நாட்களில் இனிப்பு, கார வகைகளுக்கான புக்கிங் குறைந்து இதர உணவு வகைகள் குறைந்த அளவில் வழக்கம் போல் புக்கிங் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...