திருப்பூர் மாவட்டத்தில் சித்த மருத்துவமனை மற்றும் தாய் சேய் நல விடுதி ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்ரமணியம் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டத்தில் 2 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவடைந்த சித்த மருத்துவ மனை மற்றும் தாய் சேய் நல விடுதியை திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்ரமணியம் காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: வெள்ளகோவில் அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற சித்த மருத்துவமனை மற்றும் தாய் சேய் நல விடுதி துவக்க விழாவில் இன்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்ரமணியம் கலந்து துவங்கி வைத்தார்.



பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

12 மருத்துவமனை கூடுதல் கட்டமைப்பு பணிகளுடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது, இரண்டு சித்த மருத்துவமனைகள், 2.97 கோடி மதிப்பிலான 13மருத்துவ கட்டிடங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காங்கேயம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த 12 கோடி மதிப்பில்பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் துவக்கப்படும் எனவும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக தாராபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த 24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த பணிகள் 15 ம் தேதிதுவங்கும் எனவும் டெல்லியில் நகர்புற நல்வாழ்வு மையங்கள் சிறப்பாக செயல்படுவதை போல தமிழக முதல்வர் 110 அறிவிப்பின் கீழ்

உடனடியாக நிறைவேற்றப்படும் அதன்படி 750 மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.



திருப்பூர் நகராட்சியில் 35 மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது உடுமலையில் 1 என 36 பணிகள் நடைபெற்று வருகிறது. காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு 1.25 கோடி மதிப்பிலான ஆர்.டி.பிசி ஆர் உபகரணங்கள் அமைக்கப்படுகிறது.திருப்பூரில் ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது.

கர்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. அந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. எனவே ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டாலும் அனைவருக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்கப்படும்.

ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் செய்வது சாத்தியமற்றது எனவும் முறையாக தேர்வின் அடிப்படையில் பணியில் சேர்பவர்களுக்கே இட ஒதுக்கீடு கிடைக்கும் நீதிமன்றமும் இதையே வலியுறுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.



Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...