கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் புது மனு தாக்கல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிதாக சிபிசிஐடி போலிஸார் விசாரணையை துவங்கியுள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து அவகாசம் கேட்டுள்ளார்.


நீலகிரி : கொடநாட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, 26.10.2022 முதல்சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தலைமையிலான காவல் துறையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



முதலாவதாக ஓம் பகதூர்கொலை செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்த சிபிசிஐடிகாவல் துறையினர் எஸ்டேட் மேலாளர் நட்ராஜ் மற்றும் அப்போது பணியில் இருந்தர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்,

இது தொடர்பாக ஏற்கனவே சயான்,வாளையாறு மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர்.

இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் சயான் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜராகினர்.

இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தி்ல் நடந்த வழக்கில்அரசு தரப்பு வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.



இந்த மனுவில்கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிதாக சிபிசிஐடி போலிஸார்விசாரணையை துவங்கியுள்ளதால் அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதீபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 2 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பிகளாக முருகவேல், சந்திரசேகர், அண்ணா துரை ஆகியோர் சிறப்பு புலனாய்வு விசாரணைஅதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...