கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் புது மனு தாக்கல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிதாக சிபிசிஐடி போலிஸார் விசாரணையை துவங்கியுள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து அவகாசம் கேட்டுள்ளார்.


நீலகிரி : கொடநாட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, 26.10.2022 முதல்சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தலைமையிலான காவல் துறையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



முதலாவதாக ஓம் பகதூர்கொலை செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்த சிபிசிஐடிகாவல் துறையினர் எஸ்டேட் மேலாளர் நட்ராஜ் மற்றும் அப்போது பணியில் இருந்தர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்,

இது தொடர்பாக ஏற்கனவே சயான்,வாளையாறு மனோஜ் உட்பட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் உள்ளனர்.

இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் சயான் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜராகினர்.

இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தி்ல் நடந்த வழக்கில்அரசு தரப்பு வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.



இந்த மனுவில்கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிதாக சிபிசிஐடி போலிஸார்விசாரணையை துவங்கியுள்ளதால் அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதீபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 2 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பிகளாக முருகவேல், சந்திரசேகர், அண்ணா துரை ஆகியோர் சிறப்பு புலனாய்வு விசாரணைஅதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...